Orginally posted in Alien Poet
படைக்கும் முன் பரமன் கேட்டான்
யார் முதலில் பிறக்க போகிறோம் என்று;
நான் முதலில் பிறந்து
உன்னை தூக்கி சுமக்க
வரம்கேட்டு அண்ணனாய் அவதரித்தேன்;
உன் பிஞ்சு கைகள் பிடித்து
நெஞ்சோடு அணைத்து கொஞ்சினேன் அன்று;
ஓடி விளையாடும் போது,
கைகோர்த்து கண்ணீர் சிந்தாமல்
என்னை தன்னுயிராய் காத்தாய்.
அந்த கைக்கு பரிசு
தங்கத்தால் வளையல்.
பிறவிகள் தாண்டியும் தொடரும் பாசம்
கல்யாணம் முடிந்து தாயாவாய் நீ
தாய் மாமன் என்று முடிசூட்டுவாய் எனக்கு;
என் அண்ணன் என்று ஊருக்கு சாற்றுவாய்
ஆறாத காயங்கள் எல்லாம் தாயாய் ஆற்றுவாய்;
தொப்புள் கொடி உறவு நம் பந்தம்
மருமகள் கொடுத்து தொடரட்டும் நம் சொந்தம்;